உள்ளூர் செய்திகள்

அரசு ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை

Published On 2022-06-13 08:21 GMT   |   Update On 2022-06-13 08:21 GMT
  • காரியாபட்டி அரசு ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளையடித்து சென்றனர்.
  • நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). இவர் அருகில் உள்ள சாலை மறைகுளம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டைப் பூட்டி விட்டு பாண்டியராஜன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான வத்திராயிருப்புருக்கு சென்று விட்டார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 9 பவுன் 4 கிராம் நகையை திருடி கொண்டு தப்பினர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய பாண்டியராஜன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருடு போயிருந்தது. இது குறித்து அவர் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News