உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு

Published On 2022-09-26 07:31 GMT   |   Update On 2022-09-26 07:31 GMT
  • காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர்.
  • கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கைகளாக இருந்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை இருப்பிடம் இல்லை. மேலும் வேலை வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்து வருகின்றோம்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்ற வருகின்றது. இன்று காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கைகளாக இருந்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை இருப்பிடம் இல்லை. மேலும் வேலை வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்து வருகின்றோம்.

இது மட்டுமின்றி எங்கும் வேலை தர மறுப்பதால் மன உளைச்சலில் இருந்து வருகிறோம். ஆகையால் எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்‌. இதனை தொடர்ந்து போலீசார், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தனர். அதன் பேரில் திருநங்கைகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News