உள்ளூர் செய்திகள்

பயிற்சியில் ஊராட்சி தலைவர் ஜானகிராமன் பேசினார்.

பனை ஓலை தொழில்நுட்ப பயிற்சி

Published On 2023-10-07 09:12 GMT   |   Update On 2023-10-07 09:12 GMT
  • கொறுக்கை ஊராட்சியில் அதிகமான பனை மரங்கள் உள்ளது.
  • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

திருத்துறைப்பூண்டி:

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பனை ஓலை தொழில்நுட்ப பயிற்சி 20 பெண்களுக்கு நடத்த ப்பட்டது.

பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜானகி ராமன் தலைமை தாங்கி பேசுகையில்:-

கொறுக்கை ஊராட்சி யில் அதிகமான பனை மரங்கள் உள்ளது. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் பயன்களை யாரும் அறியவில்லை.

இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மக்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும். எதிர்காலத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க உள்ளது.

மேலும், இது போன்ற பயிற்சிகள் தொடர்ந்து செய்ய ஏற்பாடு செய்ய ப்படும் என்றார்.

நிகழ்ச்சி யில் பயிற்சி யாளர் ஜான்சி ராணி பயிற்சி விபரங்களை குறித்து எடுத்துரைத்தார்.

ஊரக வாழ்வா தார இயக்க வட்டார மேலாளர் புரு ஷோ த்தமன், மகளிர் கூட்ட மைப்பு தலைவி சுமதி, பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News