உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அவிநாசி அருகே கார் ஏறி இறங்கியதில் நீதிமன்ற பணியாளர் பலி

Published On 2023-07-02 04:29 GMT   |   Update On 2023-07-02 04:29 GMT
  • வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் பாய்விரித்து படுத்து உறங்கியுள்ளாா்.
  • சாலையின் வளைவில் திரும்பிய போது, உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி மீது காா் ஏறியது

அவிநாசி:

அவிநாசி, காசிகவுண்டன்புதூா் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (வயது 59). காங்கயம் சாா்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளைதாரராக பணியாற்றி வந்தாா். விடுப்பில் உள்ள ராமசாமி, அவிநாசி மகா நகரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்துள்ளாா். வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் பாய்விரித்து படுத்து உறங்கியுள்ளாா்.

அதே பகுதியில் வசித்து வரும் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளா் குருமூா்த்தி (47) தனது வீட்டிலிருந்து காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளாா். அப்போது சாலையின் வளைவில் திரும்பிய போது, உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி மீது காா் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து குருமூா்த்தியை கைது செய்தனா்.

Tags:    

Similar News