உள்ளூர் செய்திகள்
காேப்புபடம்
தாயம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
- காளியம்மன், புல்லாத்தாள் கோவில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பொங்கலூர் அருகே உள்ள தாயம்பாளையத்தில் கற்பக விநாயகர், மாகாளியம்மன், காளியம்மன், புல்லாத்தாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நான்காம் காலயாக வேள்வி நடத்தப்பட்டு 5 மணிக்கு மேல் கற்பக விநாயகர், மாகாளியம்மன் விமான கோபுர கும்பாபிஷேகமும், காலை 6 மணிக்கு மேல் காளியம்மன், புல்லாத்தாள் கோவில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மூல விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.