உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே வாலிபர் தற்கொலை

Published On 2023-06-14 14:37 IST   |   Update On 2023-06-14 14:37:00 IST
  • முருகேசன் மது போதையில் தந்தை இறந்த துக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மகன் முருகேசன் (வயது 24). இவர் சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

முருகேசனின் தந்தை கிருஷ்ணராஜ் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தந்தை இறந்த துக்கத்தில் யாரிடமும் பேசாமல் இருந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற முருகேசன் மது போதையில் வீட்டிற்கு சென்றார்.

வீட்டில் இருந்த அவர் திடீரென தந்தை இறந்த துக்கத்தில் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத் தினர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட முருகேசனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News