உள்ளூர் செய்திகள்

கோவையில் மாணவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

Published On 2023-11-05 14:36 IST   |   Update On 2023-11-05 14:36:00 IST
  • சி.சி.டி.வி காமிரா காட்டி கொடுத்தது
  • சாய்பாபா காலனி போலீசார் விசாரணை

வடவள்ளி,

கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (வயது 19). இவர் அங்கு உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யபிரகாஷ் சம்பவத்தன்று கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்வந்த ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்து சூர்யபிரகாஷ் சாய்பாபா காலனி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராவை ஆய்வுசெய்தனர்.

இதில் சூர்ய பிரகாசிடம் செல்போன் பறித்து தப்பியது, டி.வி.எஸ் நகரை சேர்ந்த அருண்குமார் (21) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து சூர்யபிரகாஷின் செல்போனை மீட்டனர். 

Tags:    

Similar News