உள்ளூர் செய்திகள்

குளச்சலில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்

Published On 2023-09-09 15:58 IST   |   Update On 2023-09-09 15:58:00 IST
  • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று குளச்சலில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
  • பேரணியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை ஓராண்டு நிறைவையொட்டி பேரணிகள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று குளச்சலில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

இதில், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News