தமிழ்நாடு செய்திகள்

பசுமை தாயகம் அமைப்பில் மருமகள் OUT... மகள் IN...

Published On 2025-12-29 13:11 IST   |   Update On 2025-12-29 13:11:00 IST
  • அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
  • ராமதாஸின் அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

பா.ம.க.வில் தந்தை-மகனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் போக்கு அதிகரித்து தற்போது இருதரப்பினரும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று சேலத்தில் ராமதாஸ் தரப்பினர் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தினர். இதில் அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதேபோல் ராமதாஸின் அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த சௌமியா அன்புமணி நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

Similar News