தமிழ்நாடு செய்திகள்
அன்புமணி செய்தது பச்சை துரோகம்!- ஸ்ரீகாந்தி பேச்சு
- ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்கு சமம்.
- ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார்.
சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பேசியதாவது:-
அன்புமணி அணிந்திருக்கும் கோட் சூட் யார் கொடுத்தது? எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும், உழைத்து வாங்கியதா? ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்கு சமம். தம்பி அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சியை தொடங்கிக் கொள்ளட்டும்.
ராமதாஸுக்கு அன்புமணி செய்தது பச்சை துரோகம்!
ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார். யாருடன் கூட்டணி? யாருக்கு சீட்டு? எப்படி ஜெயிக்க வேண்டும் என அவருக்கு தெரியும். இனிமே குறுக்க பேச யாருமே கிடையாது. காலை வாரி விடவும் யாரும் இல்லை என்றார்.