உள்ளூர் செய்திகள்

17 வயது சிறுவன் ஓட்டி சென்ற டிராக்டர் விபத்து: மற்றொரு சிறுவன் பலி

Published On 2023-05-30 06:55 GMT   |   Update On 2023-05-30 12:21 GMT
  • டிராக்டரில் செல்லும் போது வயல்வெளியில் டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வரதராஜன் கீழே விழுந்தான்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திட்டக்குடி:

அரியலூர் மாவட்டம் டி. கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் . இவருக்கும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வரதராஜன் (10) என்ற ஒரு மகன்இருந்தான். பழனிவேல் கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

ரேகா தனது மகனுடன் தனது தாய் வீடான கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் வசித்து வந்த வருகிறார். ரேகாவின் தம்பி மணிகண்டன் தாட்கோவில் கடன் பெற்று புதிய டிராக்டர் வாங்கியுள்ளார்.

இந்த டாக்டரை மணிகண்டனின் உறவினர், அரியலூர் மாவட்டம் குழுமூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்தான். இவன் சிறுவன் வரதராஜனை ஏற்றிக் கொண்டு விவசாய பணிக்காக டிராக்டரில் செல்லும் போது வயல்வெளியில் டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வரதராஜன் கீழே விழுந்தான்.

டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . நேற்று திட்டக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக வரதராஜனை சேர்த்துள்ளனர் .மேலும் அவன் வீட்டுக்கு ஒரே ஆண் குழந்தை ஆவான். அவன் உயிர் இழந்த சம்பவம் பெற்றோர் மட்டுமின்றி அப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News