உள்ளூர் செய்திகள்
தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த முடிச்சூர், தெற்கு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் பாபு (வயது27). இவர் புது பெருங்களத்துாரில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர், வீட்டில் உள்ள மின்விசிறி பழுதடைந்ததால் காரில் பயன்படுத்தப்படும், சிறிய மின் விசிறியை பயன்படுத்த அதற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் பாபு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.