உள்ளூர் செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஸ்டூடியோ உரிமையாளர் கைது

Published On 2023-03-07 09:20 GMT   |   Update On 2023-03-07 09:20 GMT
  • பாளை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
  • ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு சிறுமியிடம் முகம்மது இஸ்மாயில் சில்மிஷம் செய்துள்ளார்.

நெல்லை:

பாளை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில் (வயது57). இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு சிறுமியிடம் முகம்மது இஸ்மாயில் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரை கண்டிக்கவே முகம்மது இஸ்மாயில் சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து முகம்மது இஸ்மாயிலை கைது செய்தனர்.

Tags:    

Similar News