உள்ளூர் செய்திகள்

ஈச்சங்கோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2026-02-10 17:12 IST   |   Update On 2026-02-10 17:12:00 IST
  • மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு மின்பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, இனாத்துக்கான்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, வடக்கூர், சாமிபட்டி, பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், வாண்டையார் இருப்பு மடிகை, காட்டூர், காசாநாடுபுதூர், வாழமர்கோட்டை கரைமீண்டார்கோட்டை, சொக்கலை, மேல உளூர், கீழஉளூர், கோவிலூர், பொன்னாப்பூர்கிழக்கு மற்றும் மேற்கு, ஆழி வாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News