உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே சொத்தை எழுதி தர தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

Published On 2022-09-24 09:19 GMT   |   Update On 2022-09-24 09:19 GMT
கடலூர் அருகே சொத்தை எழுதி தர தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.

கடலூர்:

கடலூர் அருகே தெற்கு ராமபுரம் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 38). இவர் தனது தாய் ருக்குமணியிடம் சொத்தை எழுதி தர கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ருக்குமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மகன் கதிர்வேல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News