உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவி ஒருவருக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பட்டம் வழங்கியபோது எடுத்த படம்.

புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Published On 2023-10-26 09:10 GMT   |   Update On 2023-10-26 09:10 GMT
  • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
  • முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விளா அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன் கல்லூரியின் சாதனைகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பற்றி விரிவாக எடுத்து ரைத்தார். இதில் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி, முன்னாள் துணை வேந்தர் சொ.சுப்பையா,பூமி குழுமம் தலைவர் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தினர்.

சோகோ இந்தியா நிறு வன தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாண வர்களை காணொலி காட்சி மூலம் வாழ்த்தினார்.இந்த பட்ட மளிப்பு விழாவில் மொத்த மாக 465 மாணவர்கள், 379 மாணவி கள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற்றனர். 16 பேர் பல்கலைக்கழக அள வில் ரேங்க் எடுத்து தங்க பதக்கம் பெற்றனர்.

இக்கல்லூரியானது பிற்பட்ட கிராமப்புற இளை யோர் நலம் கருதி, கடந்த 2016-ம் ஆண்டு 40 என்ற எண்ணிக்கையில் இளங் கலை (கணிதம், கணினி யியல், வணிகப் பயன் பாட்டியல், தகவல் தொழில் நுட்பம்) ஆகிய பாடப் பிரிவுடன் ஆரம்பிக்கப் பட்டது.

இன்று இளங்கலையில் 19 பிரிவுகளும், முதுகலை யில் 7 பிரிவுகளும் ஆய்வுப் பிரிவு கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகி யவை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பன்முகத் திறனுடன் மாநில அளவி லும், மாவட்ட அளவிலும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற னர். மேலும் மாவட்ட கலெக்டர், மாநில முதல்- அமைச்சர்கள், அமைச்சர் கள், துணை வேந்தர்கள், பல்வேறு ஆளுமை களிட மும் பொற் கரங்களால் பண முடிப்பு களையும், விருதுகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

பட்டமளிப்பு விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேம மாலினி சுவாமிநாதன். முன்னாள் எம். எல். ஏ. எச்.ராஜா, நகர்மன்ற தலைவர் சே.முத்துதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News