உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்

Published On 2022-11-24 07:31 GMT   |   Update On 2022-11-24 07:31 GMT
  • மானாமதுரை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம். மாங்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் தலைமை தாங்கி பேசிய மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பொதுமக்களுக்கு பட்டா மாறுதல்களையும், புதிய குடும்ப அட்டை, உதவித்தொகை, வேளாண் விளைபொருட்கள், மக்களை தேடி மருத்துவ பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார். ஒன்றியகுழு துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மை நல அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News