மானாமதுரை தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளை
- மானாமதுரை தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
- தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே உள்ள தியேட்டரில் இன்று விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் திரையிடப்பட்டது. 9 மணிக்கு முதல் காட்சி திரை யிடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் காலை 7 மணி முதலே ரசிகர்கள் அந்த பகுதியில் திரண்டனர். 8.30 மணி அளவில் தியேட்டருக்குள் ரசிகர்கள் சென்றனர். 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. அப்போது சவுண்ட் சிஸ்டம் சரியாக வேலை செய்ய வில்லை என கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்திற்கு ரசிகர்கள் கூச்ச லிட்டப்படி இருந்தனர். சவுண்ட் இல்லாமல் படம் ஒடியதால் ரசிகர்கள் வெறுப்படைந்தனர். வெகு நேரமாகியும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட தொடங்கினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த தியேட்டர் நிர்வாகத்தினர் உடனடியாக காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து ரசிகர்களிடம் வேண்டு கோள் விடுத்து அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் ரசிகர்கள் வெளியே வந்த பின்னரும் கூச்சலிட்டப்படி நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.