உள்ளூர் செய்திகள்

பிரியதர்ஷினி

மகளிர் கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு

Published On 2022-09-28 08:21 GMT   |   Update On 2022-09-28 08:21 GMT
  • தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
  • இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் பிரியதர்ஷினி விளையாட உள்ளார்.

காரைக்குடி

காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5-வது வீதியில் வசித்து வரும் பாலமுருகன் மகள் பிரியதர்ஷினி. இவர் அழகப்பா மெட்ரிகுலேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளர் வரதராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறார். வலது கை லெக்ஸ்பின்னர், ஆல்ரவுண்டரான இவர் கடந்த ஆகஸ்டு 18-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தமிழ்நாடு பெண்கள் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வில் கலந்து கொண்டார்.

நேற்று வெளியான அணித்தேர்வு முடிவில் மாணவி பிரியதர்ஷினி 15 வயதுக்குட்பட்டோருக்கான ரவுண்ட் ராபின் போட்டிகளுக்காக தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வாகி உள்ளார்.சிவகங்கை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வான முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் பிரியதர்ஷினி விளையாட உள்ளார். சாதனை படைத்த மாணவி பிரியதர்ஷினியை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் வரதராஜன், கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News