உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2023-10-13 09:50 GMT   |   Update On 2023-10-13 09:50 GMT
  • கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு
  • ரம்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் தர்மபுரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாைதயன். இவரது மகள் ரம்யா (30),

இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த சீனிவாச பெருமாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதையன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ரம்யா தனது கணவருடன் ஓமலூரை அடுத்த காமாண்டபட்டியில் வசித்து வந்தார். மேலும் ரம்யா பெற்றோர் வீட்டிற்கு வந்து தாய் ராணியிடம் அடிக்கடி பணம் பெற்று செல்வது வழக்கம், அதன்படி கடந்த 10-ந் தேதி பணம் பெற்று சென்றார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மேலும் அவரது மாமியார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரம்யா வீட்டில் இருந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தந்தை மாதையன் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உ ள்ளார். அதன் பேரில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News