உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-09-12 15:22 IST   |   Update On 2023-09-12 15:22:00 IST
  • பாலு. இவரது மகள் சுபாஹரிணி (வயது 20). இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
  • தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வருவார்.

சேலம்:

சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகள் சுபாஹரிணி (வயது 20). இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் பஸ்சில் கல்லூரி சென்று வருவார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி சென்றவர் மாலை அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் காண வில்லை. இதுகுறித்து வீராணம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News