கோவை வாலிபரிடம் ரூ.10.65 லட்சம் மோசடி
- சாமிநாதன் முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் செலுத்தி அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார்.
- ஏமாற்றமடைந்த சாமிநாதன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சின்னியம்பா ளையம் பி.எல்.எஸ் நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(30).
இவருக்கு சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து சாமிநாதன் தனது விவரங்களை பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை கார்த்திகா என அறிமுகம் செய்து கொண்டார்.
மேலும் தங்களது நிறுவனத்தில் இணையதளத்தை பின்பற்றி அதில் உணவு சம்பந்தமாக ரிவ்யூ கொடுத்தால் அதிக கமிஷன் கிடைக்கும் எனவும் சிறிது முதலீடு செய்தால் போதும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய சாமிநாதன் முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் செலுத்தி அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார். அதற்கு அவருக்கு சிறிதளவு கமிஷன் தொகை கிடைத்தது.
பின்னர் சாமிநாதனை தொடர்பு கொண்ட கார்த்திகா அதிகளவில் முதலீடு செய்தால் அதிகமான தொகை லாபமாக கிடைக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து சாமிநாதன் சிறிது, சிறிதாக அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 10,65,118 அனுப்பினார். ஆனால் அதன்பின்னர் சாமிநாதனுக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை.
அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மொத்தமாக ரூ. 10.65 லட்சம் மோசடி செய்து விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த சாமிநாதன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.