புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்
- புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடந்தது
- இந்தி திணிப்புக்கு எதிராக
புதுக்கோட்டை,
ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கல்வி, வேலை வாய்ப்பு, அரசு நிர்வாகத்தில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்தும் வகையில், இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்க முயற்சிப்பதை கண்டித்து, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி புதுக்கோட்டையில் மாவட்ட இளைஞரணி சார்பில் திலகர்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுசுழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தன், அவைதலைவர் வீரமணி, நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் லியாகத்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராஜா, கொள்கை பரப்பு துணை செயலாளர் புதுகை விஜயா, மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துகருப்பன், மாவட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நடராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் சுப.சரவணன், சந்தோஷ், மதியழகன், பழனிவேலு, செந்தாமாரைபாலு, வளர்மதி சாத்தையா, கார்த்திகைசெல்விகுமார், பால்ராஜ், ராஜேஸ்வாரி, வழக்கறிஞலடகள் செந்தில்குமார், செல்லத்துரை, பூங்குடி சிவா, தென்னலூர் பழனியப்பன், கறம்பகுடி கருப்பையா, உட்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர்