உள்ளூர் செய்திகள்

கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு: கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-21 10:28 GMT   |   Update On 2022-06-21 10:28 GMT
  • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

கடலூர்:

அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், சுப்புராயன், ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான், நிர்வாகிகள் வைத்திலிங்கம், ஆனந்த், பால்கி, தட்சிணாமூர்த்தி, தமிழ்மணி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். 

Tags:    

Similar News