உள்ளூர் செய்திகள்

நெல்லை-குட்டம் அரசு பஸ்சை தினமும் சீராக இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-08-01 08:56 GMT   |   Update On 2022-08-01 08:56 GMT
  • நெல்லையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு சாத்தான்குளத்துக்கு 5 மணிக்கு வந்து சேரும்.
  • பஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம்:

நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக குட்டத்துக்கு அரசு பஸ் தடம் எண் 173 ஜி இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் அதிகாலை நெல்லையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு சாத்தான்குளத்துக்கு 5 மணிக்கு வந்து சேரும். வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முறையாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ்சை நம்பி வெளியூர்களில் இருந்து அதிகாலை வரும் வியாபாரிகள், கொள் முதல் செய்ய செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த பஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள், வியா பாரிகள் பெரிதும் பாதிக்க ப்படுகின்றனர். ஆதலால் போக்கு வரத்து துறை அதிகாரிகள் இதனை கவனித்து தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News