உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

Published On 2022-08-15 07:59 GMT   |   Update On 2022-08-15 07:59 GMT
சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி ஆனார்.

கடலூர்:

சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (35) இவர் நஞ்சைமகத்து வாழ்க்கை அருகே படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ள தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் அருகே மீன்பிடிக்கும் போது எதிர்பாராவிதமாக படகு நீரில் கவிழ்ந்ததில் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து இவரது மனைவி ராஜேஸ்வரி கிள்ளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News