உள்ளூர் செய்திகள்
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
- இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார்.
- வாகனம் எங்கும் கிடைக்காததை அடுத்து சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே கார்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பூதாமூர் சுடுகாடு அருகே உள்ள மண் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார்.திரும்பி வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனது மோட்டார் சைக்கிளை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் வாகனம் எங்கும் கிடைக்காததை அடுத்து சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.