உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-06-28 07:52 GMT   |   Update On 2023-06-28 07:52 GMT
  • மதுரையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி யசோதை. கடந்த ஒரு மாதமாக பழனிசாமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மனைவி யசோதை 100 நாள் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். மனவிரக்தியில் இருந்த பழனிசாமி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து யசோதை கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News