உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-வாலிபர் கைது

Published On 2023-02-14 13:22 IST   |   Update On 2023-02-14 13:23:00 IST
  • திருமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
  • 7ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சின்னஉலகாணியை சேர்ந்தவர் காளி முத்து(வயது 23). இவர் 16 வயதுடைய பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருமங்கலம் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட காரிகுட்டிபட்டியை சேர்ந்தவர் ராம்ஜி(23). இவர் 7ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவனின் பாட்டி சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்ஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

Similar News