- சோழவந்தான் பகுதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11 அபிஷேகங்கள் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து பூஜைகள் நடந்தன. இதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இந்தப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.