உள்ளூர் செய்திகள்
செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- பாலமேடு அருகே கரந்தமலை, செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை அய்யூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்வவிநாயகர், கரந்தமலை, செல்லாயி அம்மன், மண்டுக்கருப்பு, அய்யனார், சப்தகண்ணிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
3 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் 4 கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அய்யூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.