விபத்தில் பலியான தந்தை-மகள்.
மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பரிதாப சாவு
- மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பரிதாப இறந்தனர்.
- மற்றொரு விபத்தில் டோல்கேட் ஊழியர் நசுங்கி பலியானார்.
மதுரை
மதுரையை அடுத்த திருப் பரங்குன்றம் அருகேயுள்ள ஹார்விபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் உறவுக்கார பெண் மற்றும் தனது மகள், மகனுடன் இன்று மதியம் விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட் டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உசிலம் பட்டி சந்திப்பு அருகே சென்றபோது, மோட் டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடியது. அதனை நிறுத்தமுயன்றும் முடியா–ததால் இறுதியில் அருகி–லிருந்த வழிகாட்டி பலகை–யில் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற அய்யனார் குடும்பத்தினருடன் தூக்கி வீசப்பட்டார். இதில் அய்யனார் மற்றும் அவரது மகள் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தி–லேயே பரிதாபமாக உயிரி–ழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த அந்த பெண் மற்றும் அய்யனாரின் மகன் இரு–வரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
மற்ெறாரு விபத்து
விபத்தை ஏற்படுத்திய வடமாநில லாரி மற்றும் விபத்தில் சேதம் அடைந்த ஆம்னி வேனை படத்ல் காணலாம்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரை நோக்கி வந்தது. அந்த லாரி மது–ரையை அடுத்த வண்டியூர் டோல்கேட்டில் நுழைந்த–போது திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடி, டோல்கேட்டில் பணம் வசூலிக்கும் கவுண்டர் மீது மோதியது. இதில் பணம் வசூலில் ஈடுபட்டிருந்த டோல்கேட் ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். மேலும் விபத்தை ஏற்படுத் திய அந்த லாரி நிற்காமல் தொடர்ந்து சென்று எதிர் திசையில் வந்த மற்றொரு ஆம்னி வேன் மீதும் மோதி–யது.
இதில் அந்த வேனில் பயணம் செய்த 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் டோல்கேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.