உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

Published On 2023-05-08 14:29 IST   |   Update On 2023-05-08 14:30:00 IST
  • மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
  • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை

சிம்மக்கல் முத்து இருளப்பன் சந்தை சேர்ந்தவர் அருண் பாண்டி (27), கட்டிட தொழிலாளி. யாகப்பா நகர் பாண்டியன் தெருவில் உள்ள சங்கரன் (56) என்பவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அருண்பாண்டியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழியிலேயே அருண்பாண்டி பரிதாபமாக இறந்தார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News