உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

Published On 2023-02-11 14:10 IST   |   Update On 2023-02-11 14:10:00 IST
  • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • திருமணம் நடந்தபோது மணமகள் 15 வயது சிறுமியாக இருந்தது தெரியவந்தது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது35). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமங்கலம் தெற்குதெருவை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறுமி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்வேந்திரன் புகார் கொடுத்தார். இது குறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது செல்வேந்திரனுக்கு திருமணம் நடந்தபோது மணமகள் 15 வயது சிறுமியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் ஊர்நலஅலுவலர் காமு இந்தக் குழந்தை திருமணம் தொடர்பாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் செல்வேந்திரன் மீது போக்சோ சட்டத்திலும் மற்றும் அவரது தந்தை முத்துகழுவன், தாய் சத்யபாமா மற்றும் சிறுமியின் உறவினர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News