பெரியார் பெயரை சொல்லி தயவுசெய்து கொள்ளை அடிக்காதீர்கள்- விஜய் ஆவேச பேச்சு
- ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
- பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஈரோடு:
ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:-
எனது 10 வயது முதல் தமிழக மக்களுடன் உள்ள தொடர்பை யாராலும் கெடுக்க முடியாது. உங்களை நம்பிதான் வந்திருக்கிறேன், உடன் நிற்பீர்கள் தானே? என்று விஜய் கேட்க கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து விஜய் பேசியதாவது:-
* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தினால் பலருக்கும் நன்மை ஏற்பட்டிருக்கும்.
* வள்ளுவர் கோட்டத்திற்கு காண்பித்த அக்கறையை மக்கள் மீதும் சிறிது காட்டியிருந்தால் பலருக்கு நன்மை ஏற்பட்டிருக்கும்.
* ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
* பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.
* பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவுசெய்து கொள்ளை அடிக்காதீர்கள்.
* பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் நமது கொள்கை எதிரி.
* எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டு தான் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களுக்கும் நமக்கும் தான் போட்டி.
* தேர்தல் களத்தில் இல்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.
* த.வெ.க. ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?
* எனக்கு பயமில்லை என சத்தம் போட்டு பாடுவது ஏன்?
* அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. எதிரிகள் குறித்து மக்கள் புரிந்து கொண்டால் போதும்.
* 24 மணி நேரமும் தி.மு.க.வினரின் நோக்கம் விஜய், த.வெ.க.வை எப்படி முடக்கலாம் என்பதை பற்றித்தான் சிந்திக்கிறார்கள்.
* ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என் ஆய்வு செய்தால் ஒன்றும் இல்லை, ஜீரோ தான்.
* நெல் கொள்முதல் செய்வதிலும் ஊழல்.
* ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை கூட கிடையாது.
* மக்களுக்கு என்ன செய்வது என நினைக்காமல் விஜயை எப்படி எதிர்க்கலாம் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் சிறப்பாக வேலை நடக்கிறது.
* தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை தூர்வாராமல் ஆற்று மணலை மட்டும் கொள்ளை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
* மணல், மலை காணாமல் போனது போல் செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்புள்ளது.
* மற்ற மாவட்டங்களில் மணல், மலை காணாமல் போனது போல் ஈரோட்டில் செம்மண் காணாமல் போக வாய்ப்புள்ளது.
* ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளது.
* பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மாடல் அரசு எனக்கூறிக்கொள்ள உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
* நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? நான் பேசும் விஷயங்களை பாருங்கள் என்றார்.