உள்ளூர் செய்திகள்
கார், பைக் மீது கல்வீசி தாக்கிய 3 பேர் கைது
- மதுரை அருகே கார், பைக் மீது கல்வீசி தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 2 கார் மற்றும் பைக்கை ஆர்.ஆர். மண்டபம் அருகே நிறுத்தி இருந்தனர்.
மதுரை
மதிச்சியம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் தீபக்ஆனந்த் (32). இவருக்கு சொந்தமான 2 கார் மற்றும் பைக்கை ஆர்.ஆர். மண்டபம் அருகே நிறுத்தி இருந்தார்.
இந்த பைக்கை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஹரி சுரேஷ் (24), மதிச்சியம் தெற்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் மகன் ரூபன்குமார் (24), மதுரை மாவட்டம் பூலாங்குளம் கணபதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு (23) ஆகியோர் கல்லால் தாக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து மதிச்சியம் போலீசில் தீபக்ஆனந்த் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.