உள்ளூர் செய்திகள்

தடுப்பூசி நடைபெறும் மையத்தை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31-ம் கட்டமாக 1,346 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

Published On 2022-07-11 15:18 IST   |   Update On 2022-07-11 15:18:00 IST
  • கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் மூலம் தீவிர நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
  • இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 35 ஆயிரத்து 976 ஆகும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 31ம் கட்டமாக 1346 மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பேரண்டப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வர் ஆணைப்படி நமது மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என மொத்தம் 1,346 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.

நமது மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 56 ஆயிரத்து 251 ஆகும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 35 ஆயிரத்து 976 ஆகும்.

அதே போல 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் மொத்தம் 86 ஆயிரத்து 800 ஆகும். இவற்றில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 78 ஆயிரத்து 792. இரண்டா வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 65 ஆயிரத்து 72 ஆகும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 15 லட்சத்து 2 ஆயிரத்து 300 பேர்.

இவற்றில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 13 லட்சத்து 61 ஆயிரத்து 20 நபர்கள் ஆவார்கள்.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 691 நபர்கள் ஆவார்கள். இன்று கோவிஷீல்டு 2 லட்சத்து 24 ஆயிரத்து 510 தடுப்பூசிகளும், கோவேக்சின் 53 ஆயிரத்து 700 தடுப்பூசிகள், கார்பிவேக்ஸ் தடுப்பூசிகள் 3,120 என மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 330 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் மூலம் தீவிர நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும். வெளியி டங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணியவேண்டும். எனவே, இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாது காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது டாக்டர் ராகவேந்திர குமார், வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜாமணி மற்றும், சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News