உள்ளூர் செய்திகள்

ஜக்டோ- ஜியோவினர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வேதாரண்யத்தில், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்த ஜாக்டோ- ஜியோவினர்

Published On 2023-04-09 08:21 GMT   |   Update On 2023-04-09 08:21 GMT
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  • முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு.

வேதாரண்யம்:

வேதாரண்யத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. விடம் நாகை மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தலிங்கம், புயல் குமார், திருமாவளவன், ரவி, திருமுருகன், ராமமூர்த்தி, செந்தில் நாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்தியஅரசு அறிவிக்கும் அகவி லைப்படிக்கு இணையான தொகையை மத்திய அரசு அறிவிக்கும் தேதியிலிருந்து நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொ ண்ட ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. இதுகுறித்து அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்து பேச வைக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News