உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபரை தாக்கிய கணவன்-மனைவி கைது

Published On 2023-08-10 15:03 IST   |   Update On 2023-08-10 15:03:00 IST
  • 2 பேருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
  • கணவன், மனைவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை,

கோவை, கண்ணப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் நிபுன்பாபு(31). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரம் அடைந்த கணவன்-மனைவி 2 பேரும் சேர்ந்து நிபுன்பாபுவை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.இதுகுறித்து நிபுன்பரு ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News