உள்ளூர் செய்திகள்

கோவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம்

Published On 2023-07-26 14:49 IST   |   Update On 2023-07-26 14:49:00 IST
  • 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க முகாம்கள் நடத்தப்படும்.
  • அடுத்த மாதம் 12-ந் தேதி சிங்காநல்லூர் வெங்கட்லட்சுமி திருமண மண்டபத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது

இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, 3 சக்கர மொபட் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் நேரடியாக மனு அளித்தனர்.

பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 7 பேருக்கு 3 சக்கர மொபட் ஆகியவற்றை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

அவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றி தரப்படும். 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க முகாம்கள் நடத்தப்படும்.

மாற்றுத் திறனாளி களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் 12-ந் தேதி சிங்காநல்லூர் வெங்கட்லட்சுமி திருமண மண்டபத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

எனவே இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் யுனைடெட் இந்தியா சமூக நல அறக்கட்டளை சார்பில் மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News