உள்ளூர் செய்திகள்

தேங்காய்க்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்

Published On 2023-08-01 15:04 IST   |   Update On 2023-08-01 15:04:00 IST
  • கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை தாங்கினார்.
  • போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

சூலூர்,

சூலூர் அருகே முத்துக்கவுண்டன் புதூரில் தேங்காய்க்கு உரிய விலை கேட்டு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் டாக்டர் தங்க ராஜ் முன்னிலை வகித்தார். பூரண்டாம்பாளையம் மணி, கோவை மாவட்ட தலைவர் கணேசன், மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

கேரள அரசு தேங்காயை கொள்முதல் செய்வது போல தமிழக அரசும் பச்சை தேங்காயை கிலோ ஒன்றுக்கு ரூ.50க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

மத்திய அரசு பாமாயில் இறக்குமதியை நிறுத்தி விட்டு தேங்காய் எண்ணை உற்பத்திக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

இதுதவிர எல்லா நியாய விலை கடைகளிலும் தேங்காய் எண்ணை விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்திற்கு பா.ஜனதா கட்சி விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் ஆதரவு தெரிவித்து பங்கேற்றார்.

போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News