ஈரோட்டில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு
- கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.
- மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 49 ஆக இருந்த நிலையில் நேற்று திடீரென 59 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாவ ட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து O92 பேர் பாதிப்பில் இருந்து குண மடைந்து வீடு திரும்பியு ள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.