- வாழ்வதை விட செத்து விடலாம் என புலம்பி கொண்டு இருந்த பழனிசாமி கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 78). இவர் கடந்த 40 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நோய் பாதிப்பால் அவரது கால் விரல்களும் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அவதி பட்டு வந்தார். இதனால் வாழ்வதை விட செத்து விடலாம் என புலம்பி கொண்டு இருந்தார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.