1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
- ஈரோடு மாவட்டத்தில் நாளை 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.
- பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதில் 12 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 18 வயது மேற்பட்ட வர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் செலுத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1597 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணையாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி என 1.50 லட்சம் பேருக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
மேலும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 3196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பி லிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.
ஈரோடு மாவட்ட பொது மக்கள் அனைவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.