உள்ளூர் செய்திகள்

கரடி கடித்ததாக பொய் தகவல் கொடுத்த 2 பேருக்கு அபராதம்

Published On 2022-08-18 09:50 GMT   |   Update On 2022-08-18 09:50 GMT
  • வனச்சரகர் தினேஷ் தலைமையில் வன பகுதியில் சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
  • வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 2பேருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திக்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. வன விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கோட்டமாளம் கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் (55) என்பவரை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதாக கூறி அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வனச்சரக அலுவகத்திக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து வனச்சரகர் தினேஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்து றையினர் ஆய்வு மேற்கொ ண்டனர். ஆய்வில் மாடு மேய்த்த திம்மையன் என்பவரை கரடி தாக்கவில்லை என்பது உறுதியானது.

இதையடுத்து திம்மையன், நாராயணன் ஆகிய 2 பேரும் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News