உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி.யை சந்தித்து ஆசி பெற்றார். அருகில் சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கனிமொழி எம்.பி.யிடம் ஆசி

Published On 2022-09-25 08:45 GMT   |   Update On 2022-09-25 08:45 GMT
  • மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.
  • அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்தார்.

உடன்குடி:

தி.மு.க., வில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக கிளை, வார்டு, பேரூர், ஒன்றிய தேர்தல் முடிந்து விட்டது. தற்போது மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பதவிக்கு போட்டியிட தற்போது பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகய்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News