உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-23 09:16 GMT   |   Update On 2023-01-23 09:16 GMT
  • சிவகிரி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர்.
  • ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

சிவகிரி:

சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள் சிவகிரி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு தங்களது தோட்டத்தில் உள்ள கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர். நிர்வாகத்தினர் அதற்குரிய பணத்தை வழங்காமல் வெகு நாட்களாக காலம் தாழ்த்தியும், ஆலையை நடத்தாமல் மூடியதாலும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராத நிலையில் நீண்ட காலமாக இருப்பதால் விவசாயிகள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர்.

ஆகவே அரசு உடனே தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சிவகிரி அருகே உள்ள ஆலையையும், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆலையையும் உடனே திறப்பதற்கும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கும் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி சிவகிரி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேலு, சிவகிரி நகர கிளைச்செயலாளர் ரவிந்திரநாத் பாரதி, வாசுதேவநல்லூர் சுப்பையா, மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News