உள்ளூர் செய்திகள்

சமையல் எரிவாயு விலை உயர்வு: மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-08 12:24 GMT   |   Update On 2023-03-08 13:09 GMT
  • எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பொன்னேரி:

பொன்னேரியில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தால் ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை விளக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தின்போது மண் அடுப்பை பற்ற வைத்து அதில் சமைக்கும் கற்கால நிலைக்கு பெண்கள் சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டி சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவர் டி.எல். சதாசிவலிங்கம் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார், இதில் நகரத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் மகிளா காங்கிரஸ் எழிலரசி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News