உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு

Published On 2023-08-10 15:07 IST   |   Update On 2023-08-10 15:07:00 IST
  • பாக்கியம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
  • பாக்கியத்திடம் 2.5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டார்.

பீளமேடு,

கோவை பெரியநாயக்கன்பாளையம், பொன்னி நகரைச் சேர்ந்த சிவபிரகாஷ் மனைவி பாக்கியம் (வயது 51). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் பாக்கியம் சம்பவத்தன்று லட்சுமி மில் சிக்னலில் இருந்து அரசு பஸ்சில் ஹோப் காலேஜிக்கு சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சிலர் பாக்கியத்திடம் 2.5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டார்.

இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News