உள்ளூர் செய்திகள்

ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின்

தவறு செய்பவர்களை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை- ஜெயக்குமார்

Published On 2022-10-10 21:15 GMT   |   Update On 2022-10-10 21:16 GMT
  • கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க.
  • குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க. தான்.

சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஒரு குடும்ப ஆதிக்கமிக்க ஒரு கட்சி. பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை தனது குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நிலையிலிருந்து அதை பார்க்கலாம். கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க. தான். ஆனால் குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க.தான்.

எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது அமைச்சராகவே இருந்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பார்கள். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல அந்த தைரியம், துணிச்சல் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் புலம்பி தள்ளியிருக்கிறார்.அதிகாரம் இருந்தும் அவரிடம் துணிச்சல் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News